படைப்புழு தாக்கத்தினால் பயிர்நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (24) ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக, கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியுமான அனுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, படைப்புழுவைக் கட்டுப்படுத்த முடியாதவாறு காணப்படுகின்ற பயிர் நிலங்களுக்கு சேதனப் பசளைகளுக்கான மானியம் வழங்குவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் உடனடியாக, பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள விவசாய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியுமான அனுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புக் கட்டுரை
01 பெப்ரவரி 2019
13 ஜனவரி 2019
17 நவம்பர் 2018
13 நவம்பர் 2018
28 அக்டோபர் 2018

Comments
RSS feed for comments to this post